(வெற்றி விக்டர்- ஆர் பார்த்திபன்)
கிள்ளான் ஏப்ரல் - 2
இன்று நடைபெற்ற ம.இ.காவின் 74 - வது பொதுப் பேரவையில் இணையம் வழி கலந்து கொண்ட பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின், இந்த கோவிட் -19 காலக்கட்டத்தில்
ம. இ.கா சுயநல அரசியல் நடத்தாமல், நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பு அரசியல் நடத்துவது அக்கட்சியின் முதிர்ச்சி நிலையைக் காட்டுகிறது எனப் பாராட்டினார்.
தமது தலைமைத்துவத்தில் இந்தியர்களின் நலன் காக்கப்படும் என்றும், அதற்கு ம.இ.கா வழங்கிய ஒத்துழைப்பு காலத்தின் அவசியம் என்றும் பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.
இதே ஒத்துழைப்பை ம.இ.கா வரும் காலங்களில் வழங்க வேண்டும் என்றும், அதுவே தமது எதிர்ப்பார்ப்பு என்றும் பிரதமர் தமது சிறப்புரையில் குறிப்பிட்டார்!
0 Comments