(வெற்றி விக்டர் – ஆர். பார்த்திபன்)
கிள்ளான் ஏப்ரல் -2: அம்னோ -ம.இகா- ம.சீ.ச ஆகிய கட்சிகள் தேசிய முன்னணியின் தூண்கள் என தேசிய முன்னணியின் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ராப் வஜ்டி டுசுக்கி தெரிவித்தார்.
தேசிய முன்னணியை உடைக்க பல சதிவேலைகள் நடக்கலாம். ஆனால், தேசிய முன்னணியை உடைக்க முடியாது என ம.இ.கா இளைஞர், மகளிர் புத்ரா, புத்ரி பேராளார் மாநாட்டில் உரையாற்றிய போது டத்தோ அஸ்ராவ் இத்தகவலைத் தெரிவித்தார்.
எந்த ஒற்றுமையை நிலைநாட்ட நமது மூதாதையர்கள் இந்தக் கூட்டமைப்பை அமைத்தார்களோ, அது காலத்திற்கும் நிலைத்திருக்கும் எனவும், எந்தச் சக்தியாலும் தேசிய முன்னணியை உடைக்க முடியாது எனவும் டத்தோ அஸ்ராப் தெரிவித்தார்.
எதிர்வரும் 15 -வது பொதுத் தேர்தலில் ம.இ.காவின் வெற்றியை உறுதி செய்ய, தேசிய முன்னணி இளைஞர் அணி கடுமையாக வேலை செய்யும் எனத் தாம் உறுதி கூறுவதாகவும். இழந்ததை மீட்டெடுப்போம் என்றும் டத்தோ அஸ்ராப் தெரிவித்தார்!
0 Comments