loader
தடுப்பூசி போட்டுக்கொண்டார் தலாய்லாமா!

தடுப்பூசி போட்டுக்கொண்டார் தலாய்லாமா!

இந்தியாவில் கடந்த 1-ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த முகாம்களில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் பங்கேற்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திபெத் புத்த மதத் தலைவர் தலாய்லாமா நேற்று இமாசல பிரதேச தலைநகர் தர்மசாலாவில் உள்ள மண்டல மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதற்காக இந்திய அரசுக்கும், இமாசல பிரதேச மாநில அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். மேலும் மக்கள் அதிக எண்ணிக்கையில் தைரியத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்!

0 Comments

leave a reply

Recent News