loader
மனித இறைச்சியை உணவகத்தில் விற்ற பெண் கைது!

மனித இறைச்சியை உணவகத்தில் விற்ற பெண் கைது!

நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தில் உணவகம் நடத்தி வந்த ஒரு பெண், மனித இறைச்சியை விற்றதற்காக  போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனாம்ப்ரா மாகாணத்தில் உள்ள குறிப்பிட்ட உணவகத்தில் மனித இறைச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த உணவகத்தில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில்
மனித இறைச்சி விற்கப்படுவது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்ட மனித உடல் பாகங்களையும், சமைக்கத் தயாராக இருந்த இறைச்சியையும் போலீசார் கண்டுபிடித்துள்ளதோடு, அந்த உணவகத்தை நடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

இறைச்சிக்காக மனிதர்கள் யாரும் கொல்லப்பட்டனரா? அல்லது அது இறந்தவர்களின் உடலா? என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிடவில்லை.

கடந்த 2015 ஆம் ஆண்டு இதே அனாம்ப்ரா மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில், மனித இறைச்சி விற்கப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News