loader
சீமான் - எடப்பாடி பழனிசாமி ரகசிய சந்திப்பா?

சீமான் - எடப்பாடி பழனிசாமி ரகசிய சந்திப்பா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் எடப்பாடி பழனிசாமி ரகசிய ஒப்பந்தம் பேசியுள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி அதிமுகவின் ‘பி’ டீம் என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான ரகசிய டீலிங் சீமான் - எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே நடைபெற்று முடிந்து விட்டது என்றும், கொளத்தூர் தொகுதியில்  சீமான் போட்டியிட மாட்டார் என்றும் தகவல் தெரிக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிவிட்டதால் அத்தனை அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் எடப்பாடி பழனிசாமி ரகசிய டீலிங் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீமான் போட்டியிடும் தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தாது என்று யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கு போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் அடிக்கடி தெரிவித்து வருவது வழக்கம். ஆனால், அங்கு அவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆளுங்கட்சியான அதிமுகவை விமர்சிக்காமல் அக்கட்சிக்கு எதிராக களம் காணுவேன் என்று தெரிவிக்காமல் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் போட்டியிடுவேன் என்று திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நாம் தமிழர் கட்சி அதிமுகவின் ‘பி’ டீம் என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், ராஜீவ் காந்தி மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கான ரகசிய டீலிங் சீமான் - எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே நடைபெற்று முடிந்து விட்டது என்றும், கண்டிப்பாக சீமான் நிற்கும் தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, சீமான் போட்டியிடும் தொகுதி பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

முன்னதாக, 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யவைக்கும் நிகழ்ச்சி வருகிற 7-ஆம் தேதி சென்னை, இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என்று சீமான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News