இந்தியாவின் எட்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில், சர்ச்சைக்குரிய வகையில் திருவள்ளுவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இதில், திருவள்ளுவர் காவி உடை அணிந்து, தலையில் முடியில்லாது ஒரு சிறிய குடுமியுடன், நெற்றியில் திருநீறு பூசி, ருத்ராட்ச மாலை அணிந்திருப்பது போல படம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பாரதிய ஜனதாவின் அதிகாரப்பூர்வ அக்கப்பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
தற்போது பாடத்திட்டத்திலேயே திருவள்ளுவரை இப்படி குடுமி சாமியாராக மாற்றி இருப்பது பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது!
0 Comments