loader
மீண்டும் மோடி பிரதமராகும் வாய்ப்பு! தமிழகத்தில் தி.மு.க அதிக இடங்களைக் கைப்பற்றும்... பெரும்பாலான இந்திய ஊடகங்கள் கருத்துக்கணிப்பு!

மீண்டும் மோடி பிரதமராகும் வாய்ப்பு! தமிழகத்தில் தி.மு.க அதிக இடங்களைக் கைப்பற்றும்... பெரும்பாலான இந்திய ஊடகங்கள் கருத்துக்கணிப்பு!

இந்திய நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து இருக்கிறது. கடைசி மற்றும் 7-வது கட்டமாக நேற்று உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.

542 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வருகிற 23-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஆட்சி அமைக்க தனிப்பட்ட முறையில் ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ குறைந்தபட்சம் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 336 தொகுதிகளைக் கைப்பற்றியது. தனிப்பட்ட முறையில் 282 இடங்களில் வெற்றிபெற்று தனி மெஜாரிட்டி பெற்ற பாரதீய ஜனதா, தனது கூட்டணி கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு மோடி தலைமையில் புதிய அரசை அமைத்தது.

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 60 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. இதில் காங்கிரசுக்கு மட்டும் 44 இடங்கள் கிடைத்தன.

இந்த நிலையில், நேற்றுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து, ஓட்டுப்போட்டுவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு பற்றிய முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள், பாரதீய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கின்றன. அப்படி பிஜேபி வென்றால், மோடி பிரதமராகும் வாய்ப்பு மீண்டும் உருவாகும் என நம்பப்படுகிறது.

தமிழகம், புதுச்சேரியை பொறுத்தமட்டில் தேர்தல் நடந்த 39 நாடாளுமன்ற தொகுதிகளில் பெரும்பாலான இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

0 Comments

leave a reply

Recent News