loader
கமல் மீது முட்டை - கற்கள் வீச்சு!

கமல் மீது முட்டை - கற்கள் வீச்சு!

தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கிய கமல்ஹாசன் மீது முட்டை மற்றும் கற்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் பேசியது  நாடெங்கிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  டெல்லி நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசனுக்கு எதிராக அவரது உருவப் பொம்மையை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து கரூர் வேலாயுதம்பாளையத்தில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தபோது,  பொதுக்கூட்ட மேடையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.  பொதுக்கூட்ட மேடையில் பேசிவிட்டு கமல்ஹாசன் கிழே இறங்கியபோது,  அவரை நோக்கி முட்டை மற்றும் கற்கள் வீசப்பட்டன.

இதனால் பெரும் பதற்றம் நிலவியது. கல்வீசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கல்வீசிய நபர்களிடம் விசாரணை  நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது!




 

0 Comments

leave a reply

Recent News