கொரோனா பரவல் மற்றும் ரஜினியின் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பரில் பாதியில் நிறுத்தப்பட்ட 'அண்ணாத்த' படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது.
பிப்ரவரி மாத இறுதியில் ரஜினி ஷூட்டிங்கிற்கு வர விருப்பம் தெரிவித்திருபதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அரசியல் பரபரப்பான இந்தக் காலகட்டத்தில் அண்ணாத்தே திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால், ரஜினியின் உடல் நிலை, அரசியல் கட்சி வேண்டாம் என்கிற அறிவிப்பு போன்ற உளைச்சலால் ரசிகர்களும் மனம் மாறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
ரஜினி மன்றத்தின் நான்கு மாவட்ட முக்கியத் தலைவர்கள் அண்மையில் தி.மு.க-வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது!
0 Comments