தேனி நாடாளுமன்றத் தொகுதியில் துணை முதல்வர் ஓபி எஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுவதை அடுத்து, அவரக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி தேனி வந்தார்.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தமிழக முதல்வர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.
நிகழ்வில் மோடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ரவீந்திரநாத் குமார் மோடியின் காலில் விழுந்தார். இதனால் தர்மசங்கடம் அடைந்த மற்ற வேட்பளர்களும் மோடி காலில் விழத் தொடங்கினர்.
தந்தையைப் போலவே பிள்ளை என இச்சம்பவத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் ஜெயலலிதாவின் காலில் ஓபிஎஸ் விழுந்து வணங்கியதைப் போலவே, இப்போது அவரது மகனும் அந்தக் கலாச்சாரத்தைத் தொடங்கிவிட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்!
0 Comments