சிங்கப்பூர்: உலகில் கொரோனா முடிவுக்கு வர இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சிங்கப்பூர் கல்வி மந்திரி லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாரன்ஸ் வாங், கொரோனா பிரச்னை முடிந்த பிறகு உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியாது என்றும், இந்த வைரஸ் தாக்கத்தால் நிச்சயமற்ற சூழல் நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலகம் முழுவதும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது உடனடியாகவோ எளிதாகவோ இருக்காது. மாஸ்க் அணிந்து கொள்வது, கூட்டங்களைத் தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த ஆண்டும் தொடரும். அடுத்த ஆண்டும் தொடரலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்
சிங்கப்பூரின் கொரோனா தடுப்பு செயல் குழுவின் துணைத்தலைவராக லாரன்ஸ் வாங் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!
0 Comments