loader
போராட்டங்களை மீறியும் கோலாகலமாய் நடைபெற்ற இந்திய குடியரசு தினம்!

போராட்டங்களை மீறியும் கோலாகலமாய் நடைபெற்ற இந்திய குடியரசு தினம்!


இந்திய குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் இன்று கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் நடத்தி வருகிற தொடர் போராட்டம், டிராக்டர் பேரணி ஆகிய இரு பெரும் சவால்களுக்கு மத்தியில் நடைபெற்றது.

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக போர் நினைவுச்சின்னத்தில் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி அங்கிருந்து நேராக அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராஜபாதை வந்தார். அவரை முப்படை தளபதிகள் வரவேற்றனர். அவரைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ராஜபாதைக்கு வருகை தந்தார்.

அதைத் தொடர்ந்து ராஜபாதைக்கு குதிரைப்படை அணிவகுப்புடன் வருகை தந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். அதன்பின் முப்படை தளபதிகளை ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி.

அதன்பின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அப்போது 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இந்திய இராணுவத்தின் முப்படையினர் அணிவகுப்பில் பங்கேற்றதோடு, இம்முறை, முதன்முறையாக குடியரசு தின அணிவகுப்பில் வங்கதேச ராணுவத்தினர் பங்கேற்றனர்.
இந்தியா - ரஷ்யா கூட்டு தயாரிப்பில், 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை அணிவகுப்பில் இடம்பெற்றது. கேப்டன் உவாம்ரூல் ஜமன் தலைமையில் இந்த ஏவுகணை இடம்பெற்றது.

உலகின் அதிநவீன ராக்கெட் அமைப்புகளில் ஒன்றான, பினாகா மல்டி லாஞ்சர் ராக்கெட் அணிவகுப்பில் இடம்பெற்றது. முற்றிலும், தானியங்கி முறையில் செயல்படும் இந்த ராக்கெட், குறைந்த நேரத்தில் அதிகளவு பகுதிகளில் வெடிபொருட்களை வீசும் திறன்பெற்றது.

இந்திய கடற்படையின், இசைக்குழுவினர் ' ஜெய் பார்தி' பாடலுக்கு இசையமைத்தபடி, அணிவகுப்பில் அணிவகுத்து சென்றனர்.

நவீன ரேடார் மற்றும் டிஜிட்டல் முறையில் வெடிபொருட்களை கட்டுப்படுத்தும் அமைப்பை கொண்ட ஷில்கா ஆயுத அமைப்பு, கேப்டன் பீரதி சவுத்ரி தலைமையில் அணிவகுத்து சென்றது. குடியரசு தின அணிவகுப்பில், ராணுவம் சார்பில் பங்கெடுத்த ஒரே பெண் அதிகாரி ஆவர்.

இந்திய ராணுவத்தின் முக்கிய பங்காற்றும் டி-90 பீஷ்மா டாங்க் அணிவகுப்பில் பங்கேற்றது. கேப்ன் கரன்வீர் சிங் பங்கு, தலைமையில், இந்த டாங்க் அணிவகுத்து சென்றது, மிக்ரகம் மற்றும் சுபோய் போர் விமான அணிவகுப்பும் நடந்தது. 900 கிலோ மீட்டர் வேகத்தில் அதிநவீன ரபேல் போர் விமானம் விண்ணில் பறந்தது. ரபேல் விமானத்துடன் ஜாகுவார் ரக விமானங்கள் பறந்து சென்று சாகசத்தில் ஈடுபட்டன. இதனையடுத்து கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதனைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற 72-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. மூவர்ண பலூன்கள் விண்ணில் பறக்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டு குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன!

0 Comments

leave a reply

Recent News