டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்றிரவு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் உடனிருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அரசு நிர்வாகம் மற்றும் அரசியல் குறித்து விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.
மேலும், சசிகலா விவகாரம் உட்பட தேர்தல் கூட்டணி, பிரச்சார வியூகங்கள் குறித்தெல்லாம் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா கால நிர்வாகம், பருவமழை தவறி பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடுத்துரைத்த முதலமைச்சர் அரசியல் குறித்தும் ஆலோசித்திருக்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி விவகாரம், பிரச்சார செயல் திட்டங்கள், குறித்தும் இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டிருக்கிறது. மேலும், சசிகலா விடுதலை விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நிகழ்ந்திருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!
0 Comments