loader
'பிக் பாஸ்' ஆரி!  16 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்!

'பிக் பாஸ்' ஆரி! 16 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் 'பிக் பாஸ் 4' நிகழ்ச்சியின் பிரமாண்டமான இறுதிப் போட்டி நேற்று வெற்றிகரமாகத் தொடங்கியது.

100 நாட்களைக் கடந்து, ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், ஆரி, சோம் மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகிய 5 பேரும் வீட்டில் இருந்தனர்.

பல்வேறு கலைநிகழ்ச்சிகளோடு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நம் மண்ணின் மைந்தனும், 'பிக்பாஸ் 3' நாயகனுமான முகேன் ராவ் கலந்துகொண்டு பிக் பாஸ் வெற்றிக் கோப்பையை இறுதி வெற்றியாளர்கள் ஐந்து பேருக்கும் அறிமுகம் செய்து வைத்ததோடு, குறும்புத்தனமான சில டாஸ்க்குகள் கொடுத்து பரபரப்பைக் கூட்டினார்.

6 மணி நேரம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

ஃபைனலிஸ்ட் ஐந்து பேரில் நான்காம் இடம் பிடித்து சோம் சேகர் முதலில் வெளியேறினார்.

பின்னர் ரம்யா பாண்டியன் வெளியேறினார். அதன்பிறகு ரியோ வெளியேறினார்.

பின்னர் வெற்றிக்கான நபரைத் தேர்ந்தெடுக்க ஆரி மற்றும் பாலாவை கமல்ஹாசன் அழைத்து வந்தார்.

இறுதியில் வெற்றியாளர் ஆரி என்பதை பலத்த கரகோசத்துக்கு மத்தியில் அறிவித்தார் கமல்.

16 கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று அமோக ஆதரவில் வெற்றியாளராக வாகை சூடினார் ஆரி.

இரண்டாம் இடம் பிடித்த பாலா 4 கோடிக்கு மேல் வாக்குகளைப் பெற்றார்.

கேம் சேஞ்சர் விருது பாலாஜிக்கும், மோட்டிவேட்டர் விருது ஆரிக்கும் கிடைத்தது.

பரிசுத் தொகையான 50 லட்சத்தை ஆரியின் மகளைத் தூக்கி வைத்துக்கொண்டு கமல் ஆரிக்கு ஆரியின் மகள் கைப்பட வழங்கினார்!

 

0 Comments

leave a reply

Recent News