கோலாலம்பூர், ஜன 14: நாட்டில் இன்று 3,337 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 147, 855 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
சிலாங்கூரில் அதிகபட்சமாக 1036 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து ஜொகூரில் 460 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்நோய்த் தொற்றினால் இன்று ஒரே நாளில் 15 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாட்டின் இறப்பு எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 1,710 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 113, 288 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது 33,989பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 86 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது.
0 Comments