loader
ரஜினி கோபம்! ரசிகர்கள் போராட்டம்! அண்ணாத்த என்னாகும்?

ரஜினி கோபம்! ரசிகர்கள் போராட்டம்! அண்ணாத்த என்னாகும்?

அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்ன பிறகும், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் ரசிகர்கள் என்பதால், ஆத்திரம் அடைந்துள்ளார் ரஜினிகாந்த்.

இதுவரை ரஜினி மன்றம் சொல்லி அவர் ரசிகர்கள் கேட்டு நடக்காமல் இருந்தது கிடையாது. முதன்முறையாக வள்ளுவர் கோட்டத்தில் இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை அவரது ரசிகர்கள் நடத்தி உள்ளதால் ரஜினி கோபத்தில் உள்ளாராம்.

தலைமையின் உத்தரவையும் மீறி போராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக ரசிகர்களின் விருப்பத்திற்கு எதிராக ரஜினிகாந்த் நடந்து கொண்டிருக்கிறார்.  இதன் தாக்கம் அண்ணாத்த திரைப்படம் வெளியாகும்போது இருக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ரசிகர் மன்றங்களின் பலம் இனிமேல் குறையும் என்கிறார்கள்! 

0 Comments

leave a reply

Recent News