(ஆர். பார்த்திபன்)
கோலாலம்பூர் ஜனவரி-11
ஆண்டு தொடக்கத்தில் பெய்த கனமழையினால், பகாங் மற்றும் ஜொகூர் மாநிலத்தில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், சிலாங்கூர் மாநில ம.இ.கா, ஜோகூர் மாநில இந்திய மக்களுக்கு உதவும் வகையில், ஜொகூர் ம.இ.காவிற்கு 5 ஆயிரம் வெள்ளி நிதி வழங்கியது.
மேலும், சுமார் 10 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான பொருட்களை பகாங் மாநில இந்திய மக்களுக்கு சிலாங்கூர் ம.இ.கா வழங்கியது.
ம.இ.கா தலைமையகத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில், இப்பொருட்களை சிலாங்கூர் மாநில ம.இ.கா தொடர்புக்குழுத் தலைவர் எம்.பி. ராஜா, பகாங் மாநில தொடர்புக்குழுத் தலைவர் வி. ஆறுமுகத்திடம் ஒப்படைத்தார்.
சிலாங்கூர் மாநில ம.இ.கா வழங்கிய பொருட்கள் பகாங் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 600-க்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும், ஏ.பி ராஜா மற்றும் சிலாங்கூர் மாநில பொறுப்பாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் வி.ஆறுமுகம் தெரிவித்தார்.
இந்த வெள்ள நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில், ம.இ.கா பொதுச் செயலாளர் டத்தோ அசோஜன், நிர்வாகச் செயலாளர் ஏ.கே ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்!
0 Comments