புத்ராஜெயா, ஜனவரி 8- இன்று 2, 643 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 131, 108 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இன்று ஒரே நாளில் 2, 708 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 105, 431 ஆக உயர்ந்துள்ளது.
இந்நோய்த் தொற்றினால் இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாட்டின் இறப்பு எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது 25, 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 82 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது!
0 Comments