புத்ராஜெயா, ஜனவரி 7- இன்று 3, 027 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை இல்லாத உச்ச எண்ணிக்கை இதுவாகும். இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 128, 465 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இன்று ஒரே நாளில் 2, 145 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 102, 723 ஆக உயர்ந்துள்ளது.
இந்நோய்த் தொற்றினால் இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாட்டின் இறப்பு எண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது 25, 221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 63 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது!
0 Comments