கோலாலம்பூர் ஜனவரி-6
தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் அமைந்துள்ள மோகனா மினி மார்க்கெட் நிறுவனத்தினர் இம்முறை பொங்கல் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சுமார் 200 பேருக்குப் பொங்கல் பானை மற்றும் பொங்கல் வைப்பதற்கான பொருட்களை இலவசமாக வழங்கவிருக்கின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மோகனா மினி மார்க்கெட் உரிமையாளர் டத்தின் ஸ்ரீ தமயந்தி கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.30 முதல் மதியம் 2.30 மணி வரை பொங்கல் பானை மற்றும் பொங்கல் வைப்பதற்கான பொருட்கள் வழங்கப்படுவதாகவும், மோகனா மினி மார்க்கெட்டோடு ஒன்றிணைந்து பொங்கலைக் கொண்டாட வாருங்கள் எனவும் பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டார்!
0 Comments