கோலாலம்பூர், டிசம்பர் 4: தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் கனழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பலரது வீடுகள் சேதம் அடைந்து, தற்போது தற்காலிகத் தங்கும் மையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் வெள்ளத்தால் பதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு அதன் தலைவர் தினாளன் ராஜகோபால் தலைமையில் களத்தில் இறங்கி, மக்களுக்குப் பல விதமான உதவிகளைச் செய்வதற்காக தயார்நிலையில் பொருட்களைச் சேகரித்து வருகின்றனர்.
ம.இ.கா இளைஞர் பிரிவின் இயற்கை பேரிடர் குழுத் தலைவர் சுந்தரம் குப்புசாமி இது குறித்துக் கூறுகையில், ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணைத்தலைவரும், அமைச்சருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் ஆகியோரின் ஆலோசனை பெயரில், ம.இ.கா இளைஞர் பிரிவினர் பொருட்களைச் சேகரித்து வருகிறோம். இதற்காக ஒரு சிறப்புக் குழு அமைத்து இளைஞர்கள் செயல் பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இப்படிப்பட்ட பேரிடர் நிகழ்ந்தபோது, ம.இ.கா இளைஞர் பிரிவு பலவிதமான பொருட்களைத் திரட்டிச் சிறப்பாகச் செயல்பட்டதாகவும், தற்போதும் அதே முயற்சியில் களம் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ம.இ.காவின் இந்த முயற்சிக்குப் பொதுமக்களும் இளைஞர்களும் உறுதுணை புரிய வேண்டும் என, சுந்தரம் குப்புசாமி கேட்டுக்கொண்டார்.
தொடர்புக்கு: MIC YOUTH HOTLINE 019- 3774761 / SUNDRAM 013- 645 4999
SATHIA 012- 768 1890 , (JOHOR)
MOKESH 017 917 5072 (PAHANG)
0 Comments