குளுவாங், ஜனவரி-2: ஜொகூர் குளுவாங் பகுதியில் பெய்த கனத்த மழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு, சுமார் 39 குடும்பங்களைச் சேர்ந்த 135 பேர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போது அவர்கள் குளுவாங் பகுதியில் உள்ள நான்கு தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மக்கோத்தா சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் முகமட் நீர் லிங்கன் இது குறித்துக் கூறுகையில், கனத்த மழையால் இன்னும் சில பகுதி மக்கள் பதிப்படையலாம் என்றும், வெள்ளப் பேரிடர் குழு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் அதற்கான தயார் நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து சில பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போது பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளாதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, குளுவாங் பெக்கான் காஹாங் கம்போங் சொந்தோ பகுதியைச் சேர்ந்த ஹலிஜா மாஜீட் என்னும் 59 வயது மாது மரணமடைந்துள்ளார்.
வெள்ளம் பெருக்கெடுத்ததை அடுத்து, தனது வீட்டில் இருந்து தற்காலிக மையத்திற்கு புறப்பட முற்பட்டபோது, வீட்டு வாசலின் முன்புறம் உள்ள கால்வாய விழுந்து மூழ்கி மரணமடைந்ததாக குலுவாங் மாவட்ட தீயணைப்பு மீட்புப் படைத்தலைவர் அகோப் சேடேக் தெரிவித்தார்!
0 Comments