புத்ராஜெயா, டிசம்பர் 30- இன்று 1, 870 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 110, 485 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 745 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 87, 460 ஆக உயர்ந்துள்ளது.
இந்நோய்த் தொற்றினால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நாட்டின் இறப்பு எண்ணிக்கை 463 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது 22, 562 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 62 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது!
0 Comments