loader
சோகத்தை சகித்துக்கொள்ளுங்கள்! - மகாதீர்

சோகத்தை சகித்துக்கொள்ளுங்கள்! - மகாதீர்

பெட்டாலிங் ஜெயா: கோவிட் -19 தடுப்பூசி சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கான ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும், அதில் தனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகவும் துன் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று விடுத்துள்ள தனது கிறிஸ்துமஸ் தின செய்தியில், கோவிட் -19 தொற்றுநோய் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு கொண்டாட்டம் முந்தைய ஆண்டுகளைப் போல இருக்காது என்று கூறினார்.

நாம் தொற்றுநோயை எதிர்கொண்டு ஏற்கனவே ஒரு வருடம் ஆகிறது.

தற்போதைய சூழலில் மன அழுத்தத்தையும், சோகத்தையும் சகித்துக்கொள்ள, அனைத்து மலேசியர்களும் வலுவாக இருக்க வேண்டும் என்று டாக்டர் மகாதீர் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு இருளின் பின்னாலும் நம் வாழ்க்கையைப் பிரகாசிக்க ஒளி இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது நமது மனிதநேயம் தனித்து நின்று_ மகிழ்ச்சியின் ஒளியைக் கொண்டுவரட்டும்!

 

0 Comments

leave a reply

Recent News