loader
ஒவ்வொரு 33 வினாடிக்கும் கொரோனாவால் ஒருவர் மரணம்!

ஒவ்வொரு 33 வினாடிக்கும் கொரோனாவால் ஒருவர் மரணம்!

உலகம் முழுவதும்

கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 7 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் 7.78 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5.46 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17.11 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்துவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சீராகக் குறையத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்துள்ளது. முதலிடத்தில் அமெரிக்கா இருந்துவருகிறது. இதுவரை 1.85 கோடி பேர் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.27 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இது அமெரிக்க மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News