loader
தமிழ்ப்பள்ளிகளுக்கான இரண்டாம் கட்ட மானியம்! நேரடி வங்கி கணக்கில் சேர்க்கப்படும்!

தமிழ்ப்பள்ளிகளுக்கான இரண்டாம் கட்ட மானியம்! நேரடி வங்கி கணக்கில் சேர்க்கப்படும்!

ஷா ஆலாம்,  டிசம்பர் 22-  சிலாங்கூர் மாநில அரசின் தமிழ்ப்பள்ளிகளுக்கான இரண்டாம் கட்ட மானியங்கள் நேரடியாகப் பள்ளியின் வங்கி கணக்கில்  சேர்க்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் இன்று அறிவித்தார்.

கோவிட்-19 தொற்றின் காரணமாக வங்கி காசோலைகளைப் பள்ளி பொறுப்பாளர்களிடத்தில் ஒப்படைப்பதற்குப் பதிலாக, பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அல்லது பள்ளி வாரியத்தின் வங்கி கணக்குகளில் விண்ணப்பங்களுக்கு ஏற்றவாறு  சேர்க்கப்படும் என்று  அவர் தெரிவித்தார்.

முதல் கட்ட மானியமாக முதல் 83 தமிழ்ப்பள்ளிகளுக்கு 4,360,000 ரிங்கிட் ஏற்கனவே செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட மானியமாக மீதம் இருந்த 14 தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள் வங்கி கணக்குகளில் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்!

 

0 Comments

leave a reply

Recent News