loader
கொரோனா: இன்று 2,062 சம்பவங்கள் பதிவு! ஒருவர் மரணம்!

கொரோனா: இன்று 2,062 சம்பவங்கள் பதிவு! ஒருவர் மரணம்!

புத்ராஜெயா, டிசம்பர் 22- இன்று  2,062 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97, 389 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

அதிகபட்சமாக சிலாங்கூரில் மட்டும் 1,014 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதனை அடுத்து கோலாலம்பூரில் 504 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சபாவில் 252 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்று 911  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 79, 304 ஆக உயர்ந்துள்ளது.

இந்நோய்த் தொற்றினால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து நாட்டின் இறப்பு எண்ணிக்கை 439 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது 17, 646 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 111 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 51 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News