இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் ஏற்கனவே பல்வேறு நாடுகளிலும் பரவி இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.
புதிதாக கண்டறியப்பட்டுள்ள வைரஸ் 70 சதவீத வேகத்துடன் பரவி வருவதாக ஆரம்பக்கால ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில் இங்கிலாந்து அரசு இது தொடர்பாக தக்க நேரத்தில் கவனமாக நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு நாடுகள் தங்கள் தரவுகளைச் சோதித்தால் இந்த புதிய வைரஸ் தொற்று ஏற்கனவே அங்கு பரவியிருப்பதையும் கண்டறிய முடியும் என்றும் அவர் குறிபபிட்டார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, டென்மார்க், நெதர்லாந்து, உள்ளிட்ட பகுதிகளிலும் தென்ஆப்பிரிக்காவில் முழுவீச்சிலும் கொரோனா வைரஸ் பரவல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன!
0 Comments