காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தான் நிறைவேற்ற இருக்கும் திட்டங்களை அறிவித்தார்.
அதில், இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்தார்.
வீடுகளில் இல்லத்தரசிகள் செய்யும் பணிகள் மதிப்பிடவே முடியாதவை. எனவே அவர்களைக் கணக்கெடுத்து, வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் அரசு ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழக மக்கள் சாக்கடையோரங்களிலும், நதிக்கரையோரங்களிலும் அவதிப்பட்டுக்கொண்டு வசிப்பதைத் தடுக்கும் வகையில், தற்சார்பு கிராமங்கள் உருவாக்கப்படும் என்றும், சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணிக்காக்கும் வகையில் நவீனமாக அக்கிராமங்கள் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்!
0 Comments