loader
அமெரிக்காவில் ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா!

அமெரிக்காவில் ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா!

 

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுக்குள் வராமல் தொடர்கிறது. அங்கு ஒரே நாளில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 359 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது புதிய உச்சம் ஆகும்.

இதற்கு முன்பாக கடந்த 11-ந் தேதியன்று ஒரே நாளில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதே உச்சமாக இருந்தது.

அங்கு கொரோனாவுக்கு ஒரே நாளில் 2,756 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 80 லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பு 3 லட்சத்து 23 ஆயிரத்து 400-ஐ கடந்துள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்களை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புமையம் (சிடிசி) வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அமெரிக்காவில் நடைபெற்று வந்தாலும், அந்த நோய்த்தொற்று கட்டுப்பாடின்றி பரவி வருவது மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது!

0 Comments

leave a reply

Recent News