loader
90 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா! இன்று 1,683 சம்பவங்கள் பதிவு!

90 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா! இன்று 1,683 சம்பவங்கள் பதிவு!

புத்ராஜெயா, டிசம்பர் 18- இன்று  1,683 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90, 816 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சிலாங்கூரில் அதிகபட்சமாக 692 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதை அடுத்து சபாவில் 260 சம்பவங்களும், கோலாலம்பூரில் 197 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

தொடர்ந்து, நெகிரி செம்பிலான் (174), மலாக்கா (140), ஜொகூர் (77), பேராக் (65), பினாங்கு (37), லாபுவான் (19), பகாங் (6), புத்ராஜெயா  (6), கெடா (4), திரங்கானு (4), சரவாக் (1), கிளந்தான் (1) சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்று 1,214 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 75, 244 ஆக உயர்ந்துள்ளது.

இந்நோய்த் தொற்றினால் இன்று மூவர் மரணம் எதுவும் நிகழவில்லை. நாட்டின் இறப்பு எண்ணிக்கை 432 ஆக உள்ளது.

நாட்டில் தற்போது 15, 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 51 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News