loader
நைஜீரியாவில் பயங்கரவாதிகள் பள்ளியில் புகுந்து அட்டுழியம்! 300-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கடத்திச் சென்றனர்!

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் பள்ளியில் புகுந்து அட்டுழியம்! 300-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கடத்திச் சென்றனர்!


அபுஜா: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள், கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதோடு, சிறுவர் சிறுமிகளைக் கடத்திச் சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள கட்சினா மாகாணத்தில் அரசு ஆண்கள் பள்ளிக்கூடத்தில் கடந்த 11-ஆம் தேதி கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் அந்தப் பள்ளிக்கூடத்தில் புகுந்து சூறையாடினர்.

இதனால் அதிர்ச்சியில் மாணவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள பள்ளிக்கூடத்தில் இருந்து தப்பி வெளியே ஓடினர். பின்னர் அவர்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்வதற்காக அருகில் உள்ள புதர்களில் மறைந்து கொண்டனர்.

இரவு முழுவதும் அங்கேயே பதுங்கி இருந்த மாணவர்கள் சூரிய உதயத்துக்கு பின் மறுநாள் காலை வீடுகளுக்குத் திரும்பினர்.

406 மாணவர்கள் வீட்டுக்குத் திரும்பி விட்ட நிலையில், ஏறக்குறைய 400 மாணவர்கள் வீடு திரும்பவில்லை.

இதனால், மாயமான அந்த மாணவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களைப் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  எனினும், அதில் பலன் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவத்திற்கு நைஜீரிய அதிபர் முகமது புகாரி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து விசாரணை மேற்கொள்ளும்படி பாதுகாப்பு வீரர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை ஜிகாதி போராளி அமைப்பு இந்த தாக்குதலுக்கும், மாணவர்கள் கடத்தலுக்கும் பொறுப்பேற்றுஜ் கொண்டது. 

இதுபற்றி அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகாவ் கூறும்பொழுது, மேற்கத்திய கல்விக்கு எதிராகவும் மற்றும் இஸ்லாம் பெயரிலும் இந்த கடத்தல்கள் நடத்தப்பட்டன என கூறினார்.

இதனை தொடர்ந்து, அந்நாட்டு பாதுகாப்பு படையினர், கடத்தப்பட்ட மாணவர்களை மீட்கும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் கடத்தப்பட்ட மாணவர்கள் 344 பேரும் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு விட்டனர்!

0 Comments

leave a reply

Recent News