loader
எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசு நான்! - கமல் அறிவிப்பு

எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசு நான்! - கமல் அறிவிப்பு

 

சீரமைப்போம் தமிழகத்தை என்று தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தை ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், "ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ’ஒரே பிரதமர்’. எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு. சம நீதியும், சமூக நீதியும் இல்லாத, ஏற்றத்தாழ்வு சமூகத்தில் ‘ஒரே’ என்று சொல்வதே பெரும் அநீதி.

ஒரு மீனவர் அமைச்சராக வேண்டும், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும். இவையெல்லாம் எங்களால் நடைமுறைப் படுத்த முடியும். குரல் கொடுக்கும் தாகம் இருந்தும் கொடுக்காமல் இருந்து விட்டேன் அதனை சரி செய்யவே தற்போது வந்துள்ளேன்.

சிலர் நிரந்தர முதல்வர் என்று கூறுகிறார்கள். எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான். நிரந்தரம் என்று எதுவும் கிடையாது, யாரும் கிடையாது. தண்ணீரை காசுக்கு விற்கும் அரசு நல்ல அரசே இல்லை. நடுநிலை என்பது என் முப்பாட்டன் வள்ளுவன் வழி அதுவே என் வழி. அதை நான் காப்பி அடிக்கவில்லை.

வேலை செய்யாமல் ஊதியம் பெறுபவர்கள் சோம்பேறிகள் என்றால் தற்போது ஆட்சியில் இருப்பவர்களும் சோம்பேறிகள்தான்" என்று கூறினார்!

0 Comments

leave a reply

Recent News