loader
கொரோனா: இன்று 1,295 புதிய சம்பவங்கள் பதிவு! 7 பேர் மரணம்!

கொரோனா: இன்று 1,295 புதிய சம்பவங்கள் பதிவு! 7 பேர் மரணம்!

புத்ராஜெயா, டிசம்பர் 16- இன்று  1,295 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 87, 913 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சிலாங்கூரில் அதிகபட்சமாக 481 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதை அடுத்து சபாவில் 268 சம்பவங்களும், கோலாலம்பூரில் 232 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இன்று 1,052 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72, 733ஆக உயர்ந்துள்ளது.

இந்நோய்த் தொற்றினால் இன்று எழுவர் மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது 14, 751 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 53 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது!


 

0 Comments

leave a reply

Recent News