loader
நடிகை சித்ரா தற்கொலை விவகாரம்! கணவர் கைது!

நடிகை சித்ரா தற்கொலை விவகாரம்! கணவர் கைது!

 

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து, அவரின் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் பிரேதப் பரிசோதனை முடிவில் சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரின் முகத்தில் இருந்த காயங்கள் அவரின் நகக்கீறல்கள் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியது யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சித்ரா ஏற்கனவே ஒரு முறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சித்ரா ஆண்களுடன் நடிப்பதை விரும்பாத ஹேம்நாத், அவரை நடிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி சந்தேக கண்ணோட்டத்துடன் அடிக்கடி சித்தியுடன் சண்டை இட்டுள்ளார். அதனால் சித்ரா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மேலும் ஹேம்நாத்திடம் இருந்து திருமணத்திற்கு எந்த உதவியும் கிடைக்காததால், சித்ரா அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக ஹேம்நாத்தை நேற்று இரவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கின்றனர்!

0 Comments

leave a reply

Recent News