சிட்னி: கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதற்கு சீனாதான் காரணம், அந்த நாடுதான் நோயைப். பரப்பி வருகிறது என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி உலகை ஆள்வதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாகவும், இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் தன்னுடைய இராணுவ பலத்தை கூட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உலகத்தின் மிகப் பெரும் தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், ஊடக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் சுமார் இருபது லட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ரகசியமாகப் பணிபுரிந்து வருகிறார்கள் என்று பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
'தி ஆஸ்திரேலியன்' செய்தித்தாள் இதுகுறித்து கசிந்த தகவல்களை பெற்று செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 20 லட்சம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பெயர்களைத் தவிர, அவர்களின் கட்சிபதவி பிறந்த தேதி, தேசிய அடையாள எண் மற்றும் இனம் ஆகியவை, அந்த கசிந்த தகவல்களில் அடங்கி உள்ளன.
ஆனால் பெயர்கள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை.அந்த நிறுவனங்களின் பட்டியலில் தயாரிப்புத் துறையில் போயிங் மற்றும் வோக்ஸ்வேகன். மருந்துத் தயாரிப்பில் பிபைசர் மற்றும் அஸ்ட்ராசனேகா, வங்கிகளில் ஏ.என்.இசட் மற்றும் எச்.எஸ்.பி.சி ஆகியவையும் அடங்கும்.
குறிப்பாக எச்.எஸ்.பி.சி மற்றும் ஸ்டாண்ட்டர்ட் சார்டட் ஆகிய இரு வங்கிகளில் மட்டும் 700-க்கும் மேற்பட்டசீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. கூடுதலாக இத்தகைய மேற்கத்திய நிறுவனங்களில் 79,000 சீன கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகள் செயல்பட்டு வருவதும், இதன் உறுப்பினர்கள் அனைவரும் சீன அதிபரான ஜி சின்பிங்கிற்கு நேரடியாக பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதும் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பத்திரிகையாளரும் ஸ்கை நியூஸ் தொகுப்பாளருமான ஷாரி மார்க்சன் கூறும் போது, இந்த தரவுத்தளத்தில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அது கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருப்பவர்களை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல, அவர்கள் ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை இங்கிலாந்து வரை உலகம் முழுவதும் இப்போது வாழ்ந்து வருகிறார்கள், ஆனால் அது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனெனில் இது சீனா ஜனாதிபதி மற்றும் தலைவர் ஜி ஜின்பிங்கின் கீழ் கட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான ஆச்சரியத்தை கொடுக்கிறது.
"இது அவர்களின் உலகளாவிய அறிவுசார் சொத்துக்களை திருட்டில் இருந்து, பொருளாதார உளவுத்துறையிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. சில உலகளாவிய நிறுவனங்களையும் இது சங்கடப்படுத்தப் போகிறது என்று மார்க்சன் கூறினார்.
2016 ஆம் ஆண்டில் ஷாங்காயில் உள்ள ஒரு சேவையகத்திலிருந்து சீன அதிருப்தியாளர்களால் இந்த ஆவணம் கசிந்ததாகக் கூறப்படுகிறது, அவர்கள் இதைப் புலனாய்வு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினர்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்தின் மெயில் ஆன் சன்டே, பெல்ஜியத்தின் டி ஸ்டாண்டார்ட் மற்றும் ஒரு ஸ்வீடிஷ் எடிட்டர் ஆகிய நான்கு ஊடக அமைப்புகளுக்கு இந்த ஆவணம் அனுப்பப்படுவதற்கு முன்னர், இது சீனா சர்வதேச இரு கட்சி குழுவான சீனா நாடாளுமன்ற கூட்டணிக்கு கசிந்துள்ளது!
0 Comments