loader
கொரோனா: இன்று 1,229 புதிய சம்பவங்கள் பதிவு! 4 பேர் மரணம்!

கொரோனா: இன்று 1,229 புதிய சம்பவங்கள் பதிவு! 4 பேர் மரணம்!

புத்ராஜெயா, டிசம்பர் 13- இன்று ஒரே நாளில் 1,229 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,475 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இன்று 1,309பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 69, 393 ஆக உயர்ந்துள்ளது.

இந்நோய்த் தொற்றினால் இன்று 4 பேர்  மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது 13, 667  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 115 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 65 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News