loader
15 நிமிடங்களில் உமிழ்நீரை வைத்து ஸ்மார்ட்போன் மூலம் கொரோனா பரிசோதனை!

15 நிமிடங்களில் உமிழ்நீரை வைத்து ஸ்மார்ட்போன் மூலம் கொரோனா பரிசோதனை!

 


ஹூஸ்டன்: கொரோனா பெருந்தொற்றினை 15 நிமிடங்களில் கண்டறியும் உமிழ் நீர் அடிப்படையிலான ஸ்மார்ட் போன் பரிசோதனையை, அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து சயின்ஸ் அட்வான்சஸ் பத்திரிகையில் அவர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை போன்றே இந்த பரிசோதனை திறம்படச் செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட் போன் இயங்குதளம் எதிர்கால பயன்பாடாக அமையும் என்று நம்புகிறோம். கொரோனா பரிசோதனையை விரைவாக விரிவுபடுத்துவதற்கான திறனை இது வழங்குகிறது. வழக்கமாக கொரோனா பரிசோதனைக்கு தொண்டை அல்லது மூக்கு சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. இதில் உமிழ்நீர்தான் சேகரிக்கப்படுகிறது. ஆரம்ப நோய்த்தொற்றின்போது, உமிழ்நீரில் கொரோனா வைரஸ் இருக்கும்.

இந்தப்ன்பரிசோதனைக்காக ஒரு சிப்பை உருவாக்கி உள்ளோம். இது சிஆர்ஐஎஸ்பிஆர்/கேஸ் 12 ஏ மூலக்கூறுகளை பயன்படுத்துகிறது. இந்த சிப், ஸ்மார்ட் போன் அடிப்படையிலான புளோரசன்ஸ் மைக்ரோஸ்கோப்பில் இணைக்கப்படுகிறது. அதன்மூலம் உமிழ்நீர் மாதிரியில் உள்ள வைரஸ் மரபணு பொருளை சிறப்பாக கண்டறியலாம், 15 நிமிடங்களில் கொரோனா தொற்றைக் கண்டறிந்து விடலாம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

0 Comments

leave a reply

Recent News