loader
தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், டத்தோ ஶ்ரீ. சரவணன்!

தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், டத்தோ ஶ்ரீ. சரவணன்!

கோலாலம்பூர், டிசம்பர் 11- மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ. எம். சரவணன் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மனிதவள மேம்பாட்டு நிறுவனமான எச்.ஆர்.டி.எஃப்.-இன் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ ஷாஹுல் ஹமீட் டவூட்-உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தினால், இந்தத் தனிமைப்படுத்தும் உத்தரவைப் பின்பற்றுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இன்று முதல் அதன் தலைமையகம் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக எச்.ஆர்.டி.எஃப். இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக எச்.ஆர்.டி.எஃப். ஊழியர்களுக்குக் கொவிட்-19 சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு, அவர்களின் சுகாதார நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்படவிருக்கிறது!

0 Comments

leave a reply

Recent News