கட்சி தொடங்குவதற்கு முன்பு கமல் சென்று பார்த்தவர்களில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒருவர். கொள்கை ஒத்துப்போனால் கூட்டணி அமையும் என்று கமலும் சீமானும் அப்போதே சொல்லி இருந்தனர்.
ரஜினியின் அரசியல் வருகைக்கு பின்னர், இப்போது இவர்களின் கொள்கை ஒத்துப்போயிருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியும் மக்கள் மய்யம் கட்சியும் கூட்டணி அமைக்கின்றன.
இவ்விரு கட்சிகளுமே கணிசமான வாக்குகளை பெற்று வருகின்றன. அந்த வகையில் இரண்டு கட்சிகளும் இணைந்தால் கூடுதல் பலம் என்று இணைய முடிவெடுத்துள்ளதாக தகவல்.
மேலும், சிறு,சிறு கட்சிகளையும் தங்களது கூட்டணியில் இணைக்க தான் பேசுவதாக சீமான் சொல்ல, வாக்கு வங்கி அதிகமுள்ள ஒரு பெரிய கட்சியை கூட்டணிக்குள் இழுத்து வருகிறேன் என்று சீமானுக்கு வாக்கு கொடுத்திருக்கிறாராம் கமல்.
சினிமாவில்தான் கமல் சீனியர். அரசியலில் நான் தான் சீனியர் என்று சொல்லி வரும் சீமானிடம், சட்டசபைக்குள் நமது பங்களிப்பு இருக்க வேண்டும். அதற்காக என்னவெல்லாம் செய்வது என்ற தீவிர ஆலோசனையில் இருக்கிறார் கமல் என்கிறார்கள் நாம் தமிழர் வட்டாரத்தினர்.
மக்கள் மய்யத்தில் இருந்து நீக்கப்பட்ட சில நிர்வாகிகளும் இதை உறுதிப்படுத்துகின்றனர்!
0 Comments