loader
கொரோனா: இன்று 959 புதிய சம்பவங்கள் பதிவு! ஐவர் மரணம்!

கொரோனா: இன்று 959 புதிய சம்பவங்கள் பதிவு! ஐவர் மரணம்!

புத்ராஜெயா, டிசம்பர் 9 - நாட்டில் இன்று 959 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 76, 265 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சிலாங்கூரில் அதிகபட்சமாக 277 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, சபாவில் 203 சம்பவங்களும், கோலாலம்பூரில் 129 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

இன்று ஒரே நாளில் 1,068 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65, 124 ஆக உயர்ந்துள்ளது.

இந்நோய்த் தொற்றினால் இன்று ஐந்து பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 393 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது 10, 748 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 61 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News