loader
மார்டி முன்னாள் இயக்குநர் கொலை! நால்வர் மீது குற்றச்சாட்டு!

மார்டி முன்னாள் இயக்குநர் கொலை! நால்வர் மீது குற்றச்சாட்டு!

ஜாலான் டூத்தா, டிசம்பர் 9- மார்டி தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முன்னாள் இயக்குநரை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக நால்வர் இன்று கோலாலம்பூர் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

கடந்த நவம்பர் 29-ஆம் தேதி அதிகாலையில் கோலாலம்பூர், பங்சாரிலுள்ள வீடோன்றில் மார்டி முன்னாள் இயக்குனர் டாக்டர் வான் ஹசான் வான் எம்போங்-ஐ கொலை செய்ததாக அந்நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

விக்னேஸ்வரன் (22), டி.சுகு (27), பி.கோகிலன் (23) மற்றும் எம்.ரவிந்திரன் ஆகியோரே குற்றம்சாட்டப்பட்ட அந்த நால்வர் ஆவர்.

அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு கட்டாய மரணத் தண்டனை விதிக்கப்படலாம். இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அடுத்த ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும்.

மேலும், கோலாலம்பூர், தாமான் தியாரா தித்திவாங்சாவிலுள்ள வீடோன்றில் கொள்ளையடித்த குற்றத்திற்காகவும், ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டிருந்த குற்றத்திற்காகவும் அந்நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது!

0 Comments

leave a reply

Recent News