விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வருபவரும் தன் ரசிகர்களால் சித்து என அழைக்கப்பட்டவருமான நடிகை சித்ரா நேற்று இரவு சென்னையில் தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது அவரது உடல் போலீசாரால் மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்புதான் இவரது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவரது திடீர் மரணம் சின்னத்திரை வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது!
0 Comments