ஜெனீவா: உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கி உள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,85,26,041 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,74,36,549 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15 லட்சத்து 61 ஆயிரத்து 901 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,95,27,591 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,080 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது!
0 Comments