loader
இந்திய விவசாயிகள் போராட்டம்! பல இடங்களில் ரயில் மறியல்!

இந்திய விவசாயிகள் போராட்டம்! பல இடங்களில் ரயில் மறியல்!

 

டெல்லி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும் பாரத் பந்த்-ன் ஒரு பகுதியாக பல மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பல இடங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்திய அரசின் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 13-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. மகாராஷ்டிரா, ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டத்தை இடதுசாரிகள் நடத்தினர்.

இதனால் பல பகுதிகளில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. குஜராத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் டயர்களை எரித்து வாகனப் போக்குவரத்து தடுக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் அனைத்து வகையான போராட்டங்களுக்கும் தடை விதித்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது!
 

0 Comments

leave a reply

Recent News