சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
நடிகர் சரத்குமாருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா அறிகுறி இல்லாத நிலையில் அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், கொரோனாவிலிருந்து குணமடைந்து வருவதாகவும் ராதிகா சரத்குமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்!
0 Comments