loader
MCO வை மீறிய குற்றத்திற்காக 182 பேர் கைது!

MCO வை மீறிய குற்றத்திற்காக 182 பேர் கைது!

கோலாலம்பூர், டிசம்பர் 8- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய குற்றத்திற்காக நேற்று 182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 181 பேருக்கு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியைப் பின்பற்றாதது, வாடிக்கையாளர்களுக்குச் சுய விவரக் குறிப்புக் கருவிகளைத் தயார் செய்து வைக்காதது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் குறிப்பிட்டுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News