loader
கொரோனா: 1,012 புதிய சம்பவங்கள் பதிவு! நால்வர் மரணம்!

கொரோனா: 1,012 புதிய சம்பவங்கள் பதிவு! நால்வர் மரணம்!

புத்ரா ஜெயா, டிசம்பர் 8- நாட்டில் இன்று 1,012 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75, 306ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிலாங்கூரில் அதிகபட்சமாக 417 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, சபாவில் 271 சம்பவங்களும், ஜொகூரில் 108 சம்பவங்களும், கோலாலம்பூரில் 98 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. நேற்று அதிகமாகப் பதிவான நெகிரி செம்பிலானில் இன்று 23 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்று ஒரே நாளில் 1,750பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 64, 056 ஆக உயர்ந்துள்ளது.

இந்நோய்த் தொற்றினால் இன்று நால்வர் மரணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 388 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை  10, 862 பேராக குறைந்துள்ளது. இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 62 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News