நாட்டில் பாபாகோமோ என்றும் அழைக்கப்படும் அஸ்ரி இந்திய தலைவர்களை இழிவாகப் பேசிய கெடா மந்திரி பெசார் முகமட் சனுசியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
கெடா மந்திரி பெசாரின் அறிக்கை காட்டுமிராண்டித்தனமானது என்றும் அது நெறியற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு பாட்டில் குடித்து விட்டு, இரண்டு மூன்று பாட்டில் குடித்தது போல பேசக்கூடாது என்று பேசியிருக்கும் முகமட் சனூசியின் பேச்சு, மாநில அரசாங்கத்தின் திமிர்பிடித்த மனப்பான்மையைக் காட்டுவதாக பாபகோ மோ தெரிவித்துள்ளார்.
இதற்காக சனுசி வெட்கப்பட வேண்டும். மலேசிய இந்திய சமூகத்தை அவமானப்படுத்திய கெடா மந்திரி பெசார் இந்திய சமூகத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 Comments