கோலாலம்பூர், டிசம்பர் 7- அடுத்த ஆண்டு முதல் தேசியப் பள்ளிகளிலும், தேசிய வகைப் பள்ளிகளிலும் ஜாவி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2019-ஆம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, கல்வி அமைச்சின் முதலாவது துணை அமைச்சர் முஸ்லிமின் யாஹயா தெரிவித்துள்ளார்.
ஜாவி எழுத்துகளை எழுதவோ படிக்கவோ கல்வி அமைச்சு, மாணவர்களுக்குப் போதிக்காது என்றும், ஆனால், அதன் செயல்முறையை அடையாளம் காணும் பொருட்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் முஸ்லிமின் யாஹயா தெரிவித்தார்!
0 Comments